பஞ்சாப் மாநிலத்தில் ஊரடங்கு மே 31ம் தேதி வரை நீட்டிப்பு!

கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட 3ம் கட்ட ஊரடங்கு இன்றுடன் முடிவடைகிறது. இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் விதிக்கப்பட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாகவும், அதே நேரத்தில் மே 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாகவும் முதலமைச்சர் அம்ரீந்தர் சிங் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகள் சீல் வைக்கப்படும் எனவும், பிற பகுதிகளில் உள்ள கடைகள் வழக்கம் போல் செயல்பட அனுமதி அளிக்கப்படும் என்றும் பஞ்சாப் மாநில அரசு அறிவித்துள்ளது.

Exit mobile version