டெல்லியில் ஊரடங்கு மே 24ம் தேதி வரை நீட்டிப்பு

டெல்லியில் முழு ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். கொரோனா பரவல் அதிகரித்ததன் காரணமாக டெல்லியில், கடந்த ஏப்ரல் மாதம் 19ம் தேதியில் இருந்து முழு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. ஒவ்வொரு வாரமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வந்த நிலையில், நாளையுடன் முடிவடைய இருந்த ஊரடங்கு மே 24ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இந்த காலக்கட்டத்தில், அத்தியாவசிய சேவைகளை தவிர பிற சேவைகள் எதுவும் இயங்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version