வன்முறையை தூண்டும் நோக்கத்திலான திமுக MLA-உரையாடல் வெளியீடு…

கடலூரில் வழக்கு நிலுவையில் உள்ள நிலத்திற்கு உரிமை கோரும் திமுக பிரமுகருக்கு ஆதரவாக, திமுக சட்டமன்ற உறுப்பினர் வன்முறையை தூண்டும் விதமாகப் பேசி வெளியான ஆடியோ திமுகவினரின் அராஜக முகத்தை வெளிக்காட்டுவதாய் அமைந்துள்ளது.

கடலூரில் விஷ்வகர்ம மஹாஜன சங்கத்துக்கு சொந்தமான நிலத்தை, திமுக பிரமுகர் ராஜாவுக்கு வாடகை ஒப்பந்த முறையில் வழங்கியது செல்லாது என தொடரப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் திமுக ஆட்சி அமைந்ததும், ராஜா குறிப்பிட்ட இடத்தில் கட்டடப் பணியைத் தொடங்கியுள்ளார்.

இது குறித்து கேட்ட சங்க நிர்வாகிகளை மிரட்டியும் ஆபாசமாகவும் பேசியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து விஷ்வகர்மா சங்க செயலாளர் கண்ணன், திமுக சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பனுக்கு தகவல் தெரிவித்து பேசியுள்ளார். அப்போது இரண்டுபேரும் அடித்துக்கொள்ளட்டும் என்று வன்முறையைத் தூண்டும்படி, திமுக எம்.எல்.ஏ. ஐயப்பன் பேசிய ஆடியோ பதிவு சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

இதனிடையே திமுகவினர் தொடர்ந்து அராஜகத்தில் ஈடுபட்டு வருவதாகவும், எம்.எல்.ஏவின் பேச்சு மூலம் பொதுமக்கள் நிம்மதியாக வாழக்கூடிய சூழல் இல்லை என்றும் சங்க நிர்வாகிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

 

மேற்கண்ட செய்தியை காட்சிப்பதிவு வடிவமைப்பில் காண கீழே உள்ள YOUTUBE-பிரிவில் உள்நுழையுங்கள்

??⤵⤵↕↕⬇⬇⏬⏬????⤵⤵↕↕⬇⬇⏬⏬????⤵⤵↕↕⬇⬇⏬⏬??

Exit mobile version