குடிமராமத்து பணிகளை ஆய்வு செய்த கடலூர் மாவட்ட ஆட்சியர்

புவனகிரி அருகே பரதூர் கிராமத்தில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே பரதூர் கிராமத்தில் உள்ள குளங்கள், வாய்க்கால்கள் குடிமராமத்து திட்டத்தின் மூலம் தூர்வாரப்பட்டு வருகின்றன. இந்த பகுதிகளுக்கு வீராணம் ஏரியில் இருந்து பாசனத்தில் தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. ஏரிக்கு சில தினங்களில் தண்ணீர் வர இருப்பதால் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தூர்வாரும் பணிகளை நேரில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன், வீராணம் ஏரியிலிருந்து வரும் நீரை விவசாயிகளும், பொதுமக்களும் பயன்படுத்தும் வகையில் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இதையடுத்து, சேத்தியாத்தோப்பு அருகே உள்ள குமாரகுடியில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளையும் ஆட்சியர் ஆய்வு செய்தார்.

Exit mobile version