நெல்லையை சேர்ந்த சிஆர்பிஎப் வீரர் உட்பட 3 பேர் வீரமரணம்!!

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த வீரர் உட்பட, மூன்று சிஆர்பிஎப் வீரர்கள், வீரமரணம் அடைந்தனர். குவாசியாபாத் பகுதியில் சென்று கொண்டிருந்த சிஆர்பிஎப் வீரர்களின் வாகனங்களை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து தீவிரவாதிகளுக்கும், வீரர்களுக்கும் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடந்தது. இதில், சிஆர்பிஎப் வீரர்கள் மூன்று பேர் வீரமரணம் அடைந்தனர். தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த சந்திரசேகர், உத்தரபிரதேசத்தை சேர்ந்த அஸ்வனி குமார் யாதவ், பீகாரை சேர்ந்த சந்தோஷ் குமார் மிஸ்ரா ஆகியோர் வீரமரணம் அடைந்தவர்கள் ஆவர். இதற்கிடையே துப்பாக்கிச்சண்டை சம்பவத்தில் உள்ளூர்வாசி மற்றும் தீவிரவாதி ஒருவர் பலியானதும் தெரியவந்துள்ளது. சம்பவ இடத்தில் பதற்றம் நீடிப்பதால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version