அத்தி வரதரை தரிசிக்க மக்கள் கூட்டம் அலைமோதுகிறது

18வது நாளாகன இன்று காஞ்சிபுரம் அத்தி வரதரை தரிசிக்க மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் வைபவம் தொடங்கி பதினெட்டாவது நாளாக நடைபெற்று வருகிறது. நாளுக்கு நாள் பக்தர்கள் வருகை அதிகரித்து வருவதால், தேவையான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. இன்று ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் திரண்டதால் கூட்டம் அலைமோதியது.

இதனால், காஞ்சிபுரத்தில் எங்கு பார்த்தாலும் மக்கள் திரண்டுள்ள காட்சியை காண முடிகிறது. அதிகாலை 5 மணி முதலே காத்திருக்கும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அத்தி வரதரை தரிசித்து செல்கின்றனர். பக்தர்கள் சிரமமின்றி அத்தி வரதரை வழிபட மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Exit mobile version