சென்னை சிந்தாதிரிப்பேட்டை மீன் சந்தையில் மீன் வாங்க குவிந்த பொதுமக்கள்

ஞாயிறு முழு ஊரடங்கை முன்னிட்டு சென்னை சிந்தாதிரிப்பேட்டை மீன் சந்தையில் மீன் வாங்க பொதுமக்கள் அதிகளவில் குவிந்தனர்.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் நாளை முழு ஊரடங்கை முன்னிட்டு அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நாளை இறைச்சி கடைகள், மீன் சந்தைகள், சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள் செயல்பட அனுமதியில்லை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை முன்னிட்டு, அத்தியாவசிய பொருட்களை வாங்கி வைத்துக்கொள்ள பொதுமக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

சிந்தாதிரிப்பேட்டை மீன் சந்தையில் மீன் வாங்க பொதுமக்கள் அதிகளவில் கூடினர்.

தற்போது மீன்பிடி தடைக்காலம் அமலில் இருக்கும் நிலையில், வரத்து குறைந்து மீன் விலை அதிகரித்துள்ள நிலையில், இன்று மேலும் உயர்ந்து காணப்படுகிறது.

இதனிடையே காவல்துறை அறிவுறுத்தலின்படி, பொதுமக்களுக்கு கொரோனா பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த துண்டு பிரசுரங்களை மீன் வியாபாரிகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்

Exit mobile version