பயிர்க்கடன் தள்ளுபடி ரசீதை பயனாளிகளுக்கு வழங்கும் திட்டம் நாளை தொடக்கம்!

விவசாயிகளின் பயிர்க்கடனை தள்ளுபடி செய்ததற்கான ரசீதை பயனாளிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை வழங்குகிறார்.

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய 12 ஆயிரத்து 110 கோடி ரூபாய் பயிர்க் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்தார். விவசாயிகளின் நலன் கருதி முதலமைச்சர் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பால், 16 லட்சத்து 43 ஆயிரம் விவசாயகள் பயன்பெறுகின்றனர். மேலும், பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டது. இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் நாளை நடைபெறும் நிகழ்ச்சியில், பயிர்க்கடன் தள்ளுபடி செய்ததற்கான ரசீதை பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.

 

 

Exit mobile version