விடுமுறையையொட்டி அமராவதி அணை முதலைப் பண்ணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

உடுமலை அருகே உள்ள அமராவதி அணை முதலைப் பண்ணையை ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் பார்வையிட்டுச் செல்கின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த அமராவதி அணைப்பகுதியில், வனத்துறைக்கு சொந்தமான முதலைப்பண்ணை உள்ளது. இங்கு, நன்னீர் முதலை, உப்பு நீர் முதலை என ஏராளான முதலைகள் வகைகள் உள்ளன.

இங்குள்ள முதலைகளைக் காண ஏராளாமன சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் விடுமுறை தினமான நேற்று சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருந்தது. அங்கு வந்த குழந்தைகளுக்கு முதலைகளின் வாழ்வியல் பற்றி எடுத்துரைக்கப்பட்டது.

 

 

 

Exit mobile version