குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்திற்கு குரோஷியா விருது

அரசு முறை சுற்றுப்பயணமாக குரோஷியா சென்றிருக்கும் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்திற்கு, அந்நாட்டின் அரசர் டோமிஸ்லாவ் பெயரில் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

சாக்ரெப் நகரில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில், அந்நாட்டு ஜனாதிபதி கொலிண்டா கிரேபர் கிடாரோவிக் மற்றும் நாட்டின் முக்கிய தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதனை தொடர்ந்து, இருநாட்டு நட்புறவு மற்றும் வர்த்தகம் குறித்து பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. பேச்சு வார்த்தைக்கு பின் இருநாடுகளுக்கு இடையேயான முதலீடு மற்றும் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவுள்ளது.

Exit mobile version