கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்காக நிதி திரட்டும் கிரிக்கெட் வீரர்!

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர் அணிந்திருந்த சட்டை, சுமார் 60 லட்ச ரூபாய்க்கு ஏலம் போனது. கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்காக இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் நிதி திரட்டி வருகிறார். இந்நிலையில், உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் தாம் அணிந்திருந்த சட்டையை ஏலம் விடுவதாக பட்லர் அறிவித்தார். மொத்தம் 82 பேர் ஏலத்தில் கலந்து கொண்ட நிலையில், 65 ஆயிரத்து 100 பவுண்டுக்கு, அதாவது இந்திய மதிப்பில் சுமார் 60 லட்ச ரூபாய்க்கு அவரது சட்டை ஏலம் போனது.

Exit mobile version