மங்களூருவில் கிரிக்கெட் சூதாட்டக்காரர்கள் கைது

மங்களூருவில் கிரிக்கெட் சூதாட்டக்காரர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் 12-வது ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கர்நாடக மாநிலம், மங்களூருவில் ஐ.பி.எல் கிரிக்கெட் சூதாட்டத்தில் சிலர் ஈடுபடுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மங்களூரு குற்றப்பிரிவு காவல்துறையினர் நடத்திய சோதனையில், சூதாட்டத்தில் ஈடுபட்டு 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சோதனையின் போது, 4 லட்சத்து 20ஆயிரம் ரூபாய், 5 மொபைல் போன்கள் கைப்பற்றப்பட்டன. ஐபில் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது கிரிக்கெட் சூதாட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம், ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version