அக்டோபர் முதல் 2 வாரத்தில் வங்கிகள் வழங்கிய கடன் 14.35 % அதிகரிப்பு – ஆர்.பி.ஐ

அக்டோபர் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் வங்கிகள் வழங்கிய கடன் 14.35 சதவீதம் அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

அக்டோபர் 12ஆம் தேதி வரையிலான வங்கிகள் வழங்கிய கடன் 89 லட்சத்து 93 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது. கடந்த ஆண்டை விட இது 14 புள்ளி மூன்று 5 சதவீதம் அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 

கணகீட்டு காலத்தில் வங்கிகள் வழங்கிய டெபாசிட் 8 புள்ளி எட்டு 6 சதவீதம் உயர்ந்து 117 புள்ளி எட்டு 5 சதவீதமாக அதிகரித்துள்ளது. நடப்பு ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வங்கிகள் வழங்கிய உணவு அல்லா கடன் 12 புள்ளி 4 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

விவசாய கடன் 6.6 சதவீதமும், சேவைத்துறைக்கான கடன் 26.7 சதவீதமும் தனி நபர் கடன் 18.2 சதவீதமும் உயர்ந்துள்ளது.

கடந்த ஆண்டின் இதே மாதத்தில் விவசாய கடன் 6.5 சதவீதமும், சேவைத்துறை கடன் 6.5 சதவீதமும், தனி நபர் கடன் 15.7 சதவீதமும் வளர்ச்சி கண்டிருப்பதாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளி விவர அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Exit mobile version