ஆட்டோ மீது வேன் மோதி விபத்து

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே, ஆட்டோ மீது வேன் மோதிய விபத்தில் 3 பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.

கெட்டிமல்லன் புதூரை சேர்ந்த திருமூர்த்தி என்பவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவரை பார்ப்பதற்காக அவரது உறவினர்கள், ஆட்டோவில் மருத்துவமனைக்கு சென்றனர். திருவள்ளுவர் திடல் அருகே சென்றுகொண்டிருந்தபோது, எதிரே வந்த வேன், ஆட்டோ மீது மோதியது. இந்த விபத்தில் ஆட்டோவில் பயணித்த 8 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Exit mobile version