பெட்ரோல் லாரி சாலையின் தடுப்பின் மீது மோதி விபத்து

செங்கத்தில் சாலை தடுப்பு சுவரின் மீது பெட்ரோல் ஏற்றிவந்த லாரி மோதி விபத்துக்குள்ளானதில் லாரியின் முன்புறம் முற்றிலும் சேதமடைந்தது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள போளூர் சாலையில் நெடுஞ்சாலைத்துறையில் சார்பில் விபத்துக்குளை தடுக்க மையத் தடுப்பு சுவர் வைக்கப்பட்டுள்ளது. இதில் செய்யாற்றில் உள்ள மூகாம்பிகை பெட்ரோல் ஏஜென்சியின் பெட்ரோல் ஏற்றி வந்த டேங்கர் லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரியின் முன்பகுதி முழுவதும் சேதமடைந்தது. இதில் வாகனத்தில் இருந்த டீசல் கொட்டிய நிலையில் வாகனம் சாலையில் நின்று கொண்டுள்ளதால், தீ பற்றி விடுமா என்ற அச்சத்தில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சாலையை கடந்து செல்கின்றனர். மேலும் அடிக்கடி இந்த பகுதிகளில் விபத்து ஏற்படுவதால் மாவட்ட நிர்வாகம் தடுப்பு சுவரை அகற்ற அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Exit mobile version