அரக்கோணத்தில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல்

வேலூர் மாவட்டம் அரக்கோணத்தில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலானது சரியான நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

வேலூர் மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த மேல்பாக்கம் ரயில் நிலையம் அருகே நள்ளிரவில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டது. இதை ரயில்வே ஊழியர்கள் சரியான நேரத்தில் கண்டு பிடித்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால் சென்னையிலிருந்து கோவை செல்லும் சேரன் அதிவிரைவு ரயில், சென்னையிலிருந்து பெங்களூரூ செல்லும் மெயில், சென்னையிலிருந்து ஈரோடு செல்லும் ஏற்காடு அதிவிரைவு ரயில் உள்ளிட்ட ரயில்கள் நடுவழியில் ஒன்றரை முதல் இரண்டு மணி நேரம் நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் அவதிக்கு உள்ளாயினர்.

Exit mobile version