கோழைத் தனமாக நீதிமன்றத்தை கெஞ்சிக் கூத்தாடியவர் திமுக தலைவர் – அமைச்சர் சி.வி.சண்முகம்

உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க திராணியில்லாமல், கோழைத் தனமாக நீதிமன்றத்தை கெஞ்சிக் கூத்தாடியவர் திமுக தலைவர் ஸ்டாலின் என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் விமர்சித்துள்ளார்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில், அதிமுக சார்பில், உள்ளாட்சித் தேர்தலுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், திமுகவையும், ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்தார். பின்னர், கட்சி நிர்வாகிகள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என அமைச்சர் கேட்டுக் கொண்டார். இக்கூட்டத்தில் அதிமுக, தேமுதிக, பாஜக, உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் கலந்துக் கொண்டனர்.

Exit mobile version