மாட்டு சாணம் 215 ரூபாய்க்கு விற்பனை!

அந்த காலங்களில் ஓவ்வொரு வீட்டிலும் பசுமாடு இல்லாத வீடுகளே இருக்காது. அதனால் பசுமாட்டின் முக்கியத்துவம் பற்றி அனைவரும் நன்கு தெரியும். தற்போதைய கால கட்டத்தில் பசுமாடு குறிப்பாக தமிழ்நாட்டில் குறைவு தான். பசுமாட்டின் நன்மைகளும் மக்களுக்கு சேர்வதும் குறைந்து கொண்டுதான் வருகிறது.

இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் பயன்படுத்துவதற்கு முன்பு, உணவு சமைக்க விறகு அடுப்பில் விறகுகளுடன் மாட்டுச் சாணத்தை தட்டி வீட்டு சுவரில் அடித்து 3 நாள்கள் வெயிலில் காய வைத்து அதன் பிறகு வரட்டியாக மாறியதை வைத்து தான் எரிப்பொருளாக வைத்து தான் சாப்பிட்டு வந்தனர்.

முந்தியெல்லாம் நோய் கிருமிகள் வரமால் தடுக்க மாட்டுச் சாணத்தை தண்ணீரில் கலந்து வீட்டு வாசலில் தொளிப்பார்கள். தற்போது, இது கிராமப்புறங்களிலும் அதன் பயன்பாடு குறைந்து கொண்டே வருகிறது. கால சுழற்ச்சியில் நாமும் வாழ்ந்து வந்ததையும் மறந்து விட்டோம். அதன் நன்மைகளும் மறந்துவிட்டோம்.

ஆனால், அமெரிக்காவின் நியூ ஜெர்சி நகரில் உள்ள பிரபல சூப்பர் மார்க்கெட்டில் பசுமாட்டு வரட்டியை விற்பனை செய்து வருகிறது. இது, உலக அளவில் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது. வெறும் 10 துண்டுகள் உள்ள ஒரு பேக்கின் விலை அமெரிக்க மதிப்பில் 2.99 டாலருக்கும். அதே, இந்திய மதிப்பில் 215 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அந்த பேக்கில் ‘மத சடங்குகளுக்கு மட்டும் ,உண்பதற்கு அல்ல’என்று குறிப்பிட்டுள்ளது. இது இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டதா. அல்ல அமெரிக்காவில் உள்ள மாடுகளின் சாணத்திலிருந்து தயாரிக்கப்பட்டதா என்று தெரியவில்லை.

Exit mobile version