அவசரகால பயன்பாட்டிற்கு கோவாக்ஸின் தடுப்பு மருந்து?

அவசர கால பயன்பாட்டுக்கு கோவாக்ஸின் தடுப்பு மருந்தை பயன்படுத்த இந்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பின் நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்ஸின் தடுப்பு மருந்தை அவசர கால பயன்பாட்டுக்கு பயன்படுத்த அனுமதி வழங்கக் கோரி, இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் நிபுணர் குழுவுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதனையடுத்து, கோவாக்ஸின் தடுப்பு மருந்திற்கு ஒப்புதல் அளிக்க கூடுதல் தரவுகளை சமர்ப்பிக்க நிபுணர் குழு உத்தரவிட்டது. இந்த நிலையில், அவசர கால பயன்பாட்டுக்கு கோவாக்ஸின் தடுப்பு மருந்தை பயன்படுத்த இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக, சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா தயாரித்த கோவிஷீல்ட் – ஆக்ஸ்ஃபோர்டு தடுப்பு மருந்தை நிபுணர் குழு பரிந்துரை செய்தது குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version