2022க்குள் கொரோனாவில் இருந்து விடுபடுவோமா? என்ன சொல்கிறது உலக சுகாதார அமைப்பு

அடுத்தாண்டு இறுதிக்குள் கொரோனாவில் இருந்து விடுபட்டு உலக நாடுகள் இயல்பு நிலைக்கு திரும்ப வாய்ப்புள்ளதாக உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், அடுத்தாண்டு இறுதிக்குள் உலகில் சுமார் 70 சதவீத மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுவிடும் என நம்பிக்கை தெரிவித்தார்.

மூன்றாம் அலை பரவும்போது, சிறார்கள் அதிக எண்ணிக்கையில் பாதிக்கப்படலாம் என்ற கருத்து நிலவுவதாகவும், அதை நினைத்து பெற்றோர்கள் கவலைப்பட தேவையில்லை என்றும் அவர் கூறினார். 

Exit mobile version