இரண்டாம் அலை முடிவு? 75 நாட்களுக்கு பிறகு 60 ஆயிரமாக குறைந்த கொரோனா

இந்தியாவில், கொரோனா தொற்று தினசரி பாதிப்பு, 75 நாட்களுக்கு பிறகு 60 ஆயிரமாக குறைந்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் 60 ஆயிரத்து 471 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 2 கோடியே 95 லட்சத்து 70ஆயிரமாக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில், கொரோனா வைரசுக்கு 2 ஆயிரத்து 726 பேர் உயிரிழந்ததை அடுத்து, இறப்பு எண்ணிக்கை 3 லட்சத்து 73 ஆயிரத்து 31ஆக அதிகரித்துள்ளது.

ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 525 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். 9 லட்சத்து 13 ஆயிரத்து 378 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் இதுவரை 25 கோடியே 90 லட்சத்து 44 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version