நீலகிரியில் தொடர்ந்து நீடிக்கும் கடும் உறை பனிப் பொழிவு : இயல்பு வாழ்கை பாதிப்பு

தொடர்ந்து நீடிக்கும் உறை பனியின் தாக்கத்தால் நீலகிரி மாவட்ட மக்களின் இயல்பு வாழ்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக கடும் உறைபனி நிலவி வருகிறது. வீட்டில் வைக்கப்பட்டுள்ள தண்ணீர் உறைந்து விடும் அளவிற்கு பனியின் தாக்கம் நீடிக்கிறது.

இதனால், அங்குள்ள தேயிலைச் செடிகள், புல் வெளிகள் அனைத்தும் கருகும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், கடும் பனிப்பொழிவு காரணமாக தேயிலை தோட்டங்கள் வெள்ளை கம்பளம் போர்த்தியது போல் காட்சியளிக்கிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version