ராபர்ட் வதேரா மீதான விசாரணைக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு

ராபர்ட் வதேரா மீதான விசாரணைக்கு தடை விதிக்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா, லண்டனில் சட்டவிரோத பணபரிமாற்றம் மூலம் சொத்து வாங்கியதாகவும், ராஜஸ்தானில் நில மோசடி செய்ததாகவும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்குகள் தொடர்பாக டெல்லி மற்றும் ஜெய்ப்பூரில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகங்களில் ராபர்ட் வதேராவிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், தன் மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கக் கோரி டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ராபர்ட் வதேரா மனுத்தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம், விசாரணைக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்ததோடு, அமலாக்கத் துறை முன்பு இன்று ஆஜராக ராபர்ட் வதேராவுக்கு உத்தரவிட்டுள்ளது.

Exit mobile version