நடிகர் சங்க தேர்தலின் வாக்குகள் எண்ணப்பட்டாலும் முடிவுகளை வெளியிட நீதிமன்றம் தடை

நடிகர் சங்க தேர்தலின் வாக்குகள் எண்ணப்பட்டாலும், முடிவுகளை வெளியிட தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு ஜூன் மாதம் 23ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில், ஏழுமலை, மற்றும் பெஞ்சமின் ஆகியோர், பல உறுப்பினர்கள் இத்தேர்தலில் வாக்களிக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளாதாகவும், மேலும், பதவிக்காலம் முடிந்த குழுவினரால் அறிவிக்கப்பட்ட தேர்தல் செல்லாது என அறிவிக்கக் கோரி, உரிமையியல் வழக்கு தொடர்ந்தனர்.

இதனை விசாரித்த நீதிமன்றம், இது குறித்து தென்னிந்திய நடிகர் சங்கமும், தேர்தல் அதிகாரியும் பதிலளிக்க உத்தரவிட்டது. மேலும், நடிகர் சங்க தேர்தலின் வாக்குகள் எண்ணப்பட்டாலும், முடிவுகளை வெளியிட தடை விதித்து உத்தரவிட்டது.

Exit mobile version