பிராந்திய மொழிகளில் நீதிமன்றத் தீர்ப்புகள் வருவது நல்லது: பிரேமலதா விஜயகாந்த்

ஆங்கிலத்தில் மட்டுமல்லாமல் அந்தந்த பிராந்திய மொழிகளில் தீர்ப்புகள் வருவது நல்லது என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் இதனைத் தெரிவித்தார். முன்னதாகச் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம், நீதிமன்றத் தீர்ப்புகள் தமிழில் வரவேண்டும் என்பது வரவேற்கக் கூடிய ஒன்று என்றும், தீர்ப்புகள் தமிழில் வந்தால் வரவேற்போம் எனவும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version