திண்டுக்கல்லில் நாட்டுவெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் தம்பதி கொலை

திண்டுக்கல் நல்லாம்பட்டி பகுதியில் தம்பதியை அரிவாளால் வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பியோடிய மர்ம கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். திண்டுக்கல் பாறைப்பட்டியை சேர்ந்தவர் பாண்டி. இவரது மனைவி பஞ்சு. இவர்களுக்கு அசோக் குமார், சேகர் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில், இன்றுகாலை மர்மநபர்கள் சிலர் வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசியதாகவும், சத்தம் கேட்டதையடுத்து வெளியே வந்து பார்த்த, பாண்டி மற்றும் பஞ்சுவை மர்மநபர்கள் அரிவாளால் சரமாரியாக தாக்கி விட்டு தப்பியோடினர்.

இதில், நிலைகுலைந்த தம்பதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலை வழக்கு ஒன்றில் பாண்டியின் மகன்களான அசோக் குமார், சேகர் ஆகியோர் ஜாமீனில் வெளியே உள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version