குளத்தூரில் வீட்டின் வெளியே தூங்கிக் கொண்டிருந்த தம்பதி வெட்டிக் கொலை

தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் பெரியார் நகரில் புதுமண தம்பதியினர் கொலைச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தை சேர்ந்த சோலைராஜன், ஜோதி ஆகியோர் பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்துகொண்டனர். சோலைராஜனின் சொந்தவூரான குளத்தூரில் இருவரும் வசித்து வந்தனர். இந்தநிலையில், காலையில் வீட்டின் வெளியே கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இருவரும் கொலை செய்யப்பட்டு கிடந்தனர்.

இதுதொடர்பாக குளத்தூர் காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் விரைந்து வந்து தம்பதியினர் இருவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து பல்லாகுளத்தை சேர்ந்த ஜோதியின் உறவினர்கள் 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version