நாடு தழுவிய வேலைநிறுத்தம் : தமிழகத்தில் எந்த பாதிப்பும் இல்லை

நாடு தழுவிய வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் எந்த பாதிப்பும் இல்லை. பேருந்துகள் வழக்கம்போல் இயங்குகின்றன. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்றும் நாளையும் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தை, பல்வேறு தொழிற்சங்கங்கள் நடத்துகின்றன. தமிழகத்தில் வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மக்களின் அத்தியாவசிய சேவையில் பாதிப்பு கூடாது என்பதால், போக்குவரத்து கழக தொழிலாளர்கள் விடுப்பு எடுக்க, தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், வேலைநிறுத்தம் காரணமாக தமிழகத்தில் எவ்வித பாதிப்பும் இல்லை. பேருந்துகள் வழக்கம்போல் இயங்குகின்றன. இதனால் பொதுமக்கள் சிரமமின்றி பயணித்து வருகின்றனர்.

Exit mobile version