கர்நாடக மாநிலத்தில் வாகன சோதனையில் பிடிபட்ட கள்ள நோட்டுகள்

கர்நாடக மாநிலத்தில் கட்டு கட்டாக 2ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகளை கொண்டு சென்ற வாகனத்தை காவல்துறையினர் மடக்கி பிடித்தனர்…

சாம்ராஜ்நகர் மாவட்டம் அட்டுகுழிபுரம் அருகே காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். இந்த சோதனையில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் கட்டு கட்டாக இருந்தது தெரிய வந்தது. இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர் அவற்றை சோதனையிட்டனர். அப்போது 2 ஆயிரம் நோட்டுகள் அனைத்தும் கள்ள நோட்டுகள் என தெரிய வந்தது.இதனையடுத்து ஓட்டுநரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

Exit mobile version