சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை சிறப்பு மையத்தில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்ய அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மையத்தில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மருந்தை வாங்கி செல்கின்றனர்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சைக்காக டெம்டெசிவிர் மருத்து பரிந்துரைக்கப்படுகிறது.

இந்த மருத்துக்கு தனியார் மருத்துவமனைகளில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்ய சிறப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

நேற்று திறக்கப்பட்ட இந்த சிறப்பு மையத்தில் ரெம்டெசிவிர் மருந்தை பெறுவதற்காக ஏராளமானோர் கூடினர்.

இந்த நிலையில், நேற்று மருந்து வழங்க முடியாதவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. அதைதொடர்ந்து, டோக்கன் பெற்றவர்களுக்கு இன்று காலை முதல் ரெம்டெசிவிர் மருந்து வழங்கப்பட்டது.

ஒரு ரெம்டெசிவர் குப்பியின் விலை ஆயிரத்து 545 ரூபாய் ஆகும். ஒரு நோயாளிக்கு 6 ரெம்டெசிவிர் குப்பிகள் வழங்கப்படுகிறது.

104 என்ற உதவி எண்ணில் தொடர்பு கொண்டு மருந்தை பெறலாம் என்றும் தேவையின்றி கூட்டம் கூட வேண்டாம் என்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version