கூட்டுறவு சங்கத்தில் ஒன்றரை கோடி ரூபாய்க்கு விற்பனை ஆன பருத்தி

சத்தியமங்கலம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் பருத்தி ஏலத்தில் ரூ.ஒன்றரை கோடிக்கு பருத்தி விற்பனை ஆனது.

சத்தியமங்கலம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்றுவட்டாரத்தில் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் பருத்தி பயிரிட்டுள்ளனர். தற்போது பருத்திப்பஞ்சு எடுக்கப்பட்டு விற்பனைக்காக கூட்டுறவு சங்கத்திற்கு கொண்டு வந்து, விவசாயிகள் ஏல முறையில் விற்பனை செய்து வருகின்றனர். ஏலத்தில் 8 ஆயிரம் மூட்டை பருத்தி ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது. பருத்தியை ஏலம் எடுக்க கோவை, அன்னூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வியாபாரிகள் வந்திருந்தனர். இதில் ஒரு கிலோ பருத்தி ரூ.50 முதல் ரூ.60 வரை விலைபோனது. மொத்தம் 8 ஆயிரம் மூட்டை பருத்தி, ரூ.ஒன்றரை கோடிக்கு விற்பனையானதாக கூட்டுறவு சங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

Exit mobile version