மின்கசிவால் தீப்பிடித்து எரிந்த குடிசை வீடுகள்

மேல்மருவத்தூர் அருகே மின் கசிவால் ஏற்பட்ட தீவிபத்தில் ஐந்து குடிசை வீடுகள் எரிந்து நாசமடைந்தன.

காஞ்சிபுரம் மாவட்டம் பொறையூர் பகுதில், உள்ள வீட்டின் மேல் கூரையில் தீ பிடித்துள்ளது. இதனையடுத்து,மளமளவென பரவிய தீ அருகிலுள்ள குடிசைகளும் பரவியது. அப்பகுதிக்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீ விபத்தில் வீட்டு உபயோகப் பொருள்கள், நகை, பணம் உள்ளிட்டவை எரிந்து நாசமாகின.

Exit mobile version