சொத்துவரி செலுத்தாத லயோலா கல்லூரிக்கு மாநகராட்சி எச்சரிக்கை

சென்னை மாநகராட்சிக்கு சொத்துவரி செலுத்தாத லயோலா கல்லூரி மற்றும்  பிரபல ஐந்து நட்சத்திர ஹோட்டலை எச்சரித்து மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர்.

சொத்துவரி நிலுவை வைத்துள்ள தனியார்கட்டிடங்கள், பெருநிறுவனங்களிடமிருந்து  சொத்து வரியை வசூலிக்கும் நடவடிக்கைகளை, சென்னை பெருநகர மாநகராட்சி மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில்,96 லட்சத்து 46 ஆயிரத்து 688 ரூபாய் சொத்துவரி காட்டாமல் இருக்கும் லயோலா கல்லூரி மற்றும் 75 லட்சம் ரூபாய் நிலுவை வைத்துள்ள 5 நட்சத்திர ஹோட்டல் ரெசிடெண்சி ஆகியவற்றிற்கு  மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை அறிவிப்பானையை ஒட்டியுள்ளனர். இதன் பின்பும் வரி செலுத்தாத நிறுவனங்களை மூடி சீல் வைக்கப்படும் எனவும்  எச்சரித்துள்ளனர்..

Exit mobile version