சீனாவை தொடர்ந்து தாக்கும் கொரோனா: பலி எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியது!!!

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 136 ஆக உயர்ந்தது. சீனாவில் இருந்து பரவத் தொடங்கிய கோவிட் 19 என பெயரிடப்பட்டுள்ள கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் சுமார் 90 நாடுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் இதுவரை 80 ஆயிரத்து 750 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, பல்வேறு மருத்துவமனைகளில் சிசிக்சை பெற்று வருகின்றனர். 59 ஆயிரம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சீன சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 17 பேர் உயிரிழந்ததையடுத்து, சீனாவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 136 ஆக உயர்ந்தது. உலகளவில், ஒரு லட்சத்து 14 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 4 ஆயிரத்து 24 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளி விபரங்கள் வெளியாகியுள்ளன.

Exit mobile version