சண்டிகர் இளம்பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு உறுதி

பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் இளம்பெண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவை தொடர்ந்து உலக நாடுகளில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் பஞ்சாப் மாநிலம் சண்டிகரை சேர்ந்த 23 வயது இளம்பெண்ணுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட பெண் அண்மையில் பிரிட்டனில் இருந்து திரும்பியது தெரியவந்துள்ளது. இதனால் இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 152ஆக உயர்ந்துள்ளது.

Exit mobile version