அமெரிக்காவை தொடர்ந்து அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ் தாக்கத்தால் அதிகம் பாதிப்புக்குள்ளான அமெரிக்காவில், இதுவரை 13 லட்சத்து 67 ஆயிரத்து 638 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 80 ஆயிரத்து 787 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அந்நாட்டு மக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்நிலையில், துணை அதிபர் மைக் பென்ஸின் உதவியார் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து, துணை அதிபர் மைக் பென்ஸ், தன்னை சுய தனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்திக் கொண்டார். இதுவரை, வெள்ளை மாளிகையில் 4 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version