இளம் பெண்ணை காப்பாற்றிய கொரொனா வைரஸ்.. ! எப்படி தெரியுமா.. ?

உலகையே உலுக்கி வரும்  கொரொனா வைரஸ் இளம்பெண்ணை காப்பாற்றியுள்ளது.

சீனாவின் யுவான் நகரில் தோன்றிய கொரொனா வைரஸுக்கு அந்நாடு மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளும் பாதிக்கப்பட்டு வருகின்றன..  இதுவரை உங்களுக்கு 360க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் 17,000 பேருக்கு இந்நோய் ஏற்பட்டு உள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சீனாவின் ஹூபே  மாகாணத்தில் இளம் பெண்ணை இளைஞர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார்.. அந்த இளைஞரிடம் இருந்து தப்பிக்க இளம்பெண் சாதுரியமாக ஒரு பொய்யைச் சொல்லியுள்ளார்..

வுகான் நகரத்தில் இருந்து  சமீபத்தில் தான்  அந்தப் பெண் திரும்பி உள்ளதாகவும்..கொரொனா வைரஸின் அறிகுறி அந்தப் பெண்ணிடம் உள்ளதாகவும் இளைஞரை பயமுறுத்தி உள்ளார்..

இதனைக் கேட்டு அச்சமடைந்த  இளைஞர் அப்பெண்ணை  விட்டு தப்பித்து ஓடிவிட்டார். இச்சம்பவம் குறித்த இளம்பெண் சீனாவில் உள்ள உள்ளூர் ஊடகத்தின் பகிரவே இந்த உண்மை வெளிச்சத்துக்கு வந்து உள்ளது.

Exit mobile version