கொரோனா தொற்றுக்கும், கோழி இறைச்சி, முட்டை உண்பதற்கும் தொடர்பில்லை என கால்நடை பராமரிப்புத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கால்நடை பராமரிப்புத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கோழி இறைச்சி, முட்டை, இதர கோழி உணவுப் பொருளை உண்டால் கொரோனா பரவும் என்ற தவறான செய்தியை, சமூக ஊடகங்கள் மூலம் ஒருசிலர் பரப்பி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் கோழி, முட்டை இறைச்சி சாப்பிட தயக்கம் காட்டுவதாக தெரியவருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. வதந்திகள் மூலம் மக்கள் புரத தேவையினை இழப்பது ஒருபுறமிருந்தாலும், கோழி வளாப்பு மற்றும் அதனுடன் தொடர்புடைய கோழி வளர்ப்போர் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கும் சூழல் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நோய் மனிதனிடம் இருந்து மனிதனுக்கு தும்மல், சளி போன்றவற்றில் வெளிவரும் நீர்த்துளிகள் மற்றும் இவை படர்ந்துள்ள பொருட்களை தொடுவதாலும் மட்டுமே பரவுகிறது என விளக்கமளிக்கப்பட்டுள்ளது. தவறான வதந்திகளை நம்ப வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ள கால்நடை பராமரிப்புத்துறை, தயக்கமில்லாமல் அனைவரும் முட்டை மற்றும் கோழி இறைச்சியினை உட்கொள்ளலாம் என அறிவுறுத்தியுள்ளது.
கோழி இறைச்சி, முட்டை உண்பதால் கொரோனா பரவாது!
-
By Web Team

Related Content
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!
By
Web team
September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!
By
Web team
September 27, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அடித்து ஆடும் அதிமுக! அடங்கிப்போன திமுக! பதற்றத்தில் பாஜக!
By
Web team
September 27, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அதிமுக - பாஜக கூட்டணி முறிவு! பின்னணி என்ன?
By
Web team
September 26, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! சினிமா ஷூட்டிங் முடிந்துவிட்டதால் அரசியல் ஷூட்டிங்கிற்கு தயாராகிறாரா கமல்?
By
Web team
September 25, 2023