தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை- அமைச்சர் விஜயபாஸ்கர்

சீனா மற்றும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து தமிழகத்திற்கு வந்த 799 பேரை தீவிரமாக கண்காணிக்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னை கிங் ஆய்வகத்தில் கொரோனா வைரஸ் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்துக் கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், 799 பேருக்கும் சோதனை செய்யப்பட்டதாகவும், அவர்களுக்கு கொரோனா வைரஸ் அறிகுறிகள் இல்லை எனவும் தெரிவித்தார்.

Exit mobile version