ஜப்பான் கப்பலில் சிக்கியுள்ள இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு

ஜப்பான் கப்பலில் சிக்கியுள்ள மேலும் 2 இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஜப்பானின் டையமண்ட் பிரின்சஸ் சொகுசு கப்பலில் பயணித்தவர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, ஜப்பானின் யோகோஹமா கடற்பகுதியில் கடந்த 5ம் தேதி முதல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

அதில், 3 ஆயிரத்து 711 பேரில், 6 பயணிகள் உட்பட 132 பேர் இந்தியர்கள் உள்ளனர். இந்தநிலையில், இந்தியர்கள் 12 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தநிலையில், மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிபடுத்தப்பட்டுள்ளது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version