டெல்லியில் நடைபெற்ற நிஜாமுதீன் தப்லிஹி மாநாட்டில் கலந்து கொண்டவர்களுக்கு கொரோனா தொற்று!

டெல்லியில் நடைபெற்ற நிஜாமுதீன் தப்லிஹி மாநாட்டில் கலந்து கொண்டு தமிழகம் திரும்பியவர்கள் தங்களை பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ளுமாறு சுகாதாரத்துறை கேட்டுக் கொண்டுள்ளது. கடந்த மார்ச் 8 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை டெல்லியில் நடைபெற்ற நிஜாமுதீன் தப்லிஹி மாநாட்டில் கலந்து கொண்டவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மதக் கூட்டத்தில் பங்கேற்றவர்களில் ஆயிரத்து 131 பேர் தமிழகத்துக்கு வந்துள்ளனர். அவர்களில் 515 பேர் மட்டும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மதக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கொரோனா பரிசோதனை உட்படுத்தவில்லை என்றால் உடனடியாக 78 24 84 92 63 / 044- 46 27 44 11 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

Exit mobile version