ஜப்பானில் 1000க்கும் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு

ஜப்பான் நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது.

ஜப்பானில் கொரோனா வைரஸ் பாதிப்பால் 12 பேர் உயிரிழந்தனர். கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து ஒன்றாக அதிகரித்துள்ளது.

இவர்களில் 706 பேர், டைமண்ட் பிரின்சஸ் சொகுசு கப்பலில் இருந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. மேலும் சீனாவில் இருந்து ஜப்பான் வந்த 12 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ஜப்பானில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பெரும்பாலான பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதேபோல், பொது நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டன.

Exit mobile version