தமிழகத்தில் மேலும் 526 பேருக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 535 ஆக அதிகரித்துள்ளது. இதில் ஆயிரத்து 867 பேருக்கு கோயம்பேடு காய்கறி சந்தை மூலம் தொற்று ஏற்பட்டதாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. புதிதாக கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட 526 பேரில் 360 பேர் ஆண்கள் என்றும், 166 பேர் பெண்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக தலைநகர் சென்னையில் 279 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 51 ஆக உயர்ந்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் 67 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 40 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செயப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் 31 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 26 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 17 பேருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை இல்லாத வகையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 219 பேர் நேற்று ஒரே நாளில் குணமடைந்துள்ளனர். இதனால் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 824 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தவர்களின் சதவீதம் 27.91 ஆக உள்ளது.

Exit mobile version