பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று!

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசுக்கு பிரபலங்களும் விளையாட்டு வீரர்களும் தப்பவில்லை. அந்த வகையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, இங்கிலாந்துக்கு ஜூன் 24ம் தேதி சுற்றுப்பயணம் செல்ல உள்ளது. இதற்கு முன்பாக பாகிஸ்தான் வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த பரிசோதனையில், ஷாதப் கான், ஹைதர் அலி, ஹரிஷ் ராஃப் ஆகிய மூன்று  வீரர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. மூன்று வீரர்களுக்கும் அறிகுறிகள் எதுவும் இல்லை என்றும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவுடன் சுய தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.  ஏற்கனவே பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்ரிடிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version