ஜப்பான் கப்பலில் உள்ள 2 இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு

ஜப்பான் அருகே நிறுத்தப்பட்டுள்ள கப்பலில் உள்ள இந்தியர்கள் இருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

டைமண்ட் பிரின்சஸ் கப்பல் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஜப்பான் அருகே நிறுத்தப்பட்டுள்ளது. 3711 பேருடன் ஜப்பான் சென்ற இந்த கப்பலில்132 பணியாளர்கள், 6 பயணிகள் உள்பட 138 இந்தியர்களும் உள்ளனர். இந்த கப்பலில் பயணிக்கும் 130 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது கண்டறியப்பட்டது.  இந்நிலையில், இந்த கப்பலில் உள்ள இந்தியர்களில் இருவருக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை ஜப்பானில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

Exit mobile version