3 பேர் உயிரிழந்த சம்பவம் மூவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை!

நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் நேற்று உயிரிழந்த 3 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என தமிழக சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த 3 பேர் நேற்று உயிரிழந்தனர். அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது. உயிரிழந்தவர்களின் ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில், அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Exit mobile version