இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 லட்சத்தை கடந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 19 ஆயிரத்து 148 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 6 லட்சத்து 4 ஆயிரத்து 641 ஆக உயர்ந்துள்ளது. 2 லட்சத்து 26 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், 3 லட்சத்து 59 ஆயிரம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக உள்ள மகாராஷ்டிராவில், பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்து 80 ஆயிரத்து 298 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 94 ஆயிரத்து 49 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 52 ஆயிரத்து 926 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். டெல்லியில், 89 ஆயிரத்து 802 பேரும், குஜராத்தில் 33 ஆயிரத்து 232 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 24 ஆயிரத்து 56 பேரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். மேற்கு வங்கத்தில் 19 ஆயிரத்து 170 பேரும், ராஜஸ்தானில் 18 ஆயிரத்து 312 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தெலங்கானா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களிலும் பாதிப்பு அதிகமாக உள்ளது.

 

Exit mobile version