இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 லட்சத்து 48 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 19 ஆயிரத்து 459 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 5 லட்சத்து 48 ஆயிரதது 318 ஆக உயர்ந்துள்ளது. 2 லட்சத்து 10 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், 3 லட்சத்து 21 ஆயிரம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக உள்ள மகாராஷ்டிராவில், ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 626 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. டெல்லியில் 83 ஆயிரத்து 77 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் 82 ஆயிரத்து 275 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 52 ஆயிரத்து 607 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். குஜராத்தில் 31 ஆயிரத்து 320 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 22 ஆயிரத்து 147 பேரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். மேற்கு வங்கத்தில் 17 ஆயிரத்து 283 பேரும், ராஜஸ்தானில் 17 ஆயிரத்து 271 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தெலங்கானா, ஹரியான, ஆந்திரா போன்ற மாநிலங்களிலும் பாதிப்பு அதிகரித்துள்ளது.

Exit mobile version