மகாராஷ்டிராவில் ருத்ரதாண்டவமாடும் கொரோனா வைரஸ்!

மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 54 ஆயிரத்து 758 ஆக அதிகரித்துள்ளது. 

நாட்டின் பிற மாநிலங்களை காட்டிலும், மகாராஷ்டிராவில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 97 பேர் பலியான நிலையில், இரண்டாயிரத்து 91 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. மும்பையில் மட்டும் நேற்று 39 பேர், கொரோனா வைரசுக்கு இரையாகியுள்ளனர். அங்கு புதிதாக ஆயிரத்து இரண்டு பேருக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளதால், பாதிப்பு எண்ணிக்கை 32 ஆயிரத்து 791ஆக உயர்ந்துள்ளது. 

Exit mobile version