இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 332ஆக அதிகரிப்பு!

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் இதுவரை 332 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 83 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. நாடு முழுவதும் இதுவரை கொரோனாவிற்கு 5 பேர் உயிரிழந்துள்ளனர். 23 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். 304 பேர் தற்போது தீவிர மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

Exit mobile version